"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும். நம் கருவூர் சேரமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த கொங்கதேசத்தினை, சுந்தரர் சிவபிராமணரான குலகுருக்களுக்கு பரிபாலிக்க அளித்தார்.
Sunday, September 6, 2009
57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள்
57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள்
கொங்கதேசத்தில் இருக்கும் வன்னியர்கள் இரு பிரிவினர்:
1. இந்திரவன்னியர் - அரசப்பள்ளி - சிதம்பரத்திற்கு கிழக்கு கடல் மட்டும் உள்ளவர்கள். களந்தை (திருக்கழுக்குன்றம்) கூற்றுவ நாயனார் 78 CE இல் காஞ்சியை கைபற்றி ஆண்ட ஆந்திர பிருத்திய சாலிவாஹனனின் பிரதிநிதியான களப்பிரரான காரைக்காட்டு வேளாளர் ஆவார்.
இன்றும் கூத்தாண்டவர் (கூற்றாண்டவர்) என கூவாகம் போன்ற பல ஊர்களிலும், அதே அந்தியூரில் குன்னாசாமி (கூற்றுவநாயனார் சாமி) என்பது மருவி குன்னாசாமி (குருநாதசாமி) எனவும் வழிபடப்படுகிறார்.
யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள்:
இந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு ) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை:
இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன.
கோரைப்பல்லுடன் குன்னாசாமி (குருநாதசாமி)
பிச்சாவரம் கூத்தாடி ஆண்டவர் என்று கல்வெட்டுப்பெயருடைய குட்டியாண்டார் என்பது இவரே:
இக்கூத்தாண்டா கழுவில் ஏற்றப்படுவது காலங்காலமாக கொங்கதேச மாரியாயி கோயில்களில் வேட்டுவர்களால் நடத்தப்படும் நோன்பியாகும்.
கண்டர் என்பது வன்னியரது பாரம்பரிய பட்டப்பெயர். சேலம் கண்டகுலமாணிக்கம், கொடுமுடி ஏமகண்டனூர், சின்னக்கண்டனூர் என்ற பெயர்கள் இதனைப் பகரும். தற்போது கண்டர் என்பதனைச் சிலர் கவுண்டர் என்று தவறுதலாகப் போடுகின்றனர்.
1692இல் முகலாய பகுதியாக சிதம்பரம், ஆர்காடு நவாப், நவாப் ஜுல்பிகர் கான் நுஸ்ரத் ஜங்க்கு சேர்ந்து, அவன் பெண் கேட்டதால் சிதம்பரம் பகுதியிலிருந்து மைசூர் சிக்க தேவராஜ உடையார் பகுதியாக சேர்ந்த கொங்கதேசத்துக்கு வந்தவர்கள்.
சேர நாடான கொங்கதேசத்திற்கு பந்தமுட்டு வன்னியர்கள் வந்தவுடன்,குருவுக்குத் தெலுங்கு எழுத்துகளில் எழுதிக் கொடுத்த பட்டயம். இதில் தங்கள் மெய்க்கீர்த்தியாக "சீகாழி மறையோனுக்கு (திருஞானசம்பந்தரோடு வாதம் செய்தோர்) இடையூறு கொடுத்தவர்கள்" - பார்க்க வேள்விக்குடி கடுங்கோன் பாண்டியர் பட்டயம்)" என்று பெருமைகளாகக் கூறுவதாலும், புத்த கண்டன் எனும் பெயர்கள் இன்றளவும் உள்ளதாலும் பௌத்த பள்ளிகளைச் சார்ந்து இருந்துள்ளமை தெரிகிறது.
இதில் இக்குடியினர் ஒட்ர தேசம் (ஒடிஷா) ஆதியாக உடைவர்கள், சேர, சோழ, பாண்டியரை சிறை வைக்க சாலிவாஹனன் (சாதவாகனன்) படைக்குஆட்சியாக வந்ததாகவுள்ளது. சாலிவாகனனது காரைக்காட்டு வெள்ளாள களப்பிரரோடு பல ஒற்றுமைகள் உண்டு. கள்ளர், பள்ளி வன்னிக்குட்டி மறவர் கிளை ஜாதிகள் என்கிறது பட்டயம்.
விஜயநகர காலத்தில் படை ஆட்சிப்பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். பள்ளிகளுள் அரச வம்சமான (அரசப் பள்ளி, இந்த்ர வன்னியர்) கூற்றுவர் வம்சத்திற்குப் பிச்சாவரம் பாளையப்பட்டு தஞ்சை நாயக்கர்களால் அளிக்கப்பட்டது. ஆனால் துளுவ, ஆரவீடு வம்சத்தார் விஜயநகரைக் கைபற்றியவுடன், மோதல் ஏற்பட, அதே சமயம் முகலாயர் ஒளரங்கசீப்பின் மந்திரி நிஜாம் விஜயநகரத்தை (சந்திரகிரி) துவம்சம் செய்ய 1692 இல் அவர்களது தளபதி
ஆற்காடு நவாபு கைப்பற்றிய காலத்தில் நவாபோடு சமரசம்செய்தவர்களுக்கு
பிச்சாவரம் ஜமீந்தாரி பாளையப்பட்டு வழங்கப்பட்டது . விஜயநகரத்திற்கு நன்றியுடன் தன்மானம் காக்க விஜயநகரத்தின் எச்சமான மைசூர் சமஸ்தானத்தில் இணைந்துவிட்ட கொங்கதேசத்தில் ரெட்டியார் அதிகாரிகளும், கூற்றுவர் வாரிசுகளுக்கும் அந்தியூர் அதிகாரிகளான கொங்க வெள்ளாளர்,நரம்பர் ஆகியோர் தஞ்சம் அளித்தனர். இனறுவரை இதனால் ரெட்டிகளும், தஞ்சமளித்த கொங்கருக்கும் அந்தியூர் தேர் விழாவில் இந்த தியாக வம்சத்தால் உரிமைகள் அளிக்கப்பட்டு வருவது பிரசித்தம். இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். அவர்களுக்கும் சாமியே குலதெய்வம்! மேலும் பெத்தாரண சாமி எனும் தெலுங்கு தெய்வத்தையும் வணங்குகின்றனர். சாலிவாகனன் காலத்தில் இவர்கள் ஜாதிப்பிள்ளைகளானோர் நோக்கன் எனப்படுகின்ற தெலுங்கர்.
இந்த ஹரித கோத்திரத்து ராசப்புள்ளை அய்யர் வாரிசு நெய்வேலி N.S.பெரியசாமி அய்யர் இடம்தான் இப்பட்டயத்தின் மூலம் உள்ளது:
மேலும் குடிகளான பள்ளி நகதகர், பள்ளி கம்மாளர் (அவர்களது ஊர்கள் கீற்கண்ட மட சிஷ்யர்கள் பட்டியலில்), பள்ளி எகிலியர், பள்ளி இடையர், பள்ளி வேடர், கள்ளர், மறவர், பள்ளி சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர். தியாக வம்சம் (அந்தியூர் குருநாதசாமி குடிப்பாடு) வரலாறு:
துரோக வம்ச வரலாறு:
இஸ்லாமிய ஜமீன்தாரி உடையில் தற்போதைய ஜமீன்
அரசப்பள்ளிகள் கோத்திரங்கள்: (இந்திர கோத்திரம், வீர கோத்திரம், விஜய கோத்திரம், தாரா கோத்திரம், ததி கோத்திரம்).
இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். மேலும் குடிகளான நகதகர், வன்னிய கம்மாளர், வன்னிய எகிலியர், வன்னிய இடையர், வன்னிய வேடர், கள்ளர், மறவர், சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர்
இடங்கை வலங்கை வன்னியர் பட்டயத்தில் இவ்விஷயங்கள் உள்ளன.
"பள்ளி"யென்ற பெயர் தமிழ், திகள (கன்னட பள்ளி), கிருஷ்ண வன்னியர் (தெலுங்கு மட்டுமே பேசும் ஆந்திர பள்ளி ரெட்டி, பள்ளி காபு அனும் வன்னியர்)களது கிராம ஜாதி சபையைக் குறிப்பதாகும்.
தெலுங்கு பள்ளி ரெட்டி, பள்ளி காப்பு பற்றி மேடைப்பேச்சு:
தெலுங்கில் ஜாதிப்பெருமையைக் கூறும் ஆந்திரா தெலுங்கு வன்னியகுல சங்கத் தலைவர்:
கன்னட வன்னியகுலமான திகளரு சரித்திரம்:
தற்காலத்திலும் "பள்ளி சபா"யென்று கிராமப்பொதுச் சபைக்குக் கட்டுப்படாத ஜாதி தன்னாட்சி அமைப்புகளை தொங்காரியா கொண்ட (மலைக்கள்ளரென அர்த்தம்!) ரென்ற வன்னியர், கள்ளர், மறவரது முன்னோர்களான மத்திய பாரத (குகன் வாரிசுகள்) பூர்வகுடி மக்கள் (நாகர் - சம்ஸ்கிருதப் பெயர்) நடத்தி வருகின்றனர்.
வேடுவர் பட்டயங்களில் வன்னியர் கிளை குடிகளை ஒட்டிய தேசத்து சல்லியர் (களப்பிரர்) என்று உள்ளது : இடங்கை வலங்கை பட்டயம் (கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை) வேட்டுவர் துணையினமான முத்துராசாக்கள் பெரும்பிடுகு முத்தரையர் கல்வெட்டு முத்தரையர்கள் "கள்வர் கள்வன்" அதாவது கள்ளர்களை அடக்க வந்தவர்களென்கிறது.
2.கங்கபரிபாலன் சிஷ்டப்பள்ளி - ப்ருஹ்ம வன்னியர் -பந்தமுட்டு பள்ளி - தென்பெண்ணையாறு முதல் காவேரி வரையில் உள்ளவர்கள் - இவர்களும் 1692ல் திருமானூர் உள்ளிட்ட பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் இருந்து சேல (சங்ககிரி) க்குக் குடி பெயர்ந்தனர் என்று மூத்தோர் கூறுகின்றனர்.பஹமணி சுல்தான் படையெடுப்பு காலத்தில் அரியலூர் திருமானூர் பகுதியிலிருந்து கிளர்ச்சி செய்து தஞ்சம் புகுந்தனர்.
சமணர்,பௌத்தர்களாக ஆதீயில் வந்த இவர்கள், குருவான ருக் வேதம், யக்ஞநாராயண திக்ஷிதர் மகன் ராசப்புள்ளையர், இரவாசனூர் (எலவானாசூர்) https://goo.gl/maps/GecqEFwtDCM2 இவரது ஊர் என்கிறது பட்டயம். பெயர் பெரியசாமி அய்யர். பட்டயம் எழுதப்பட்டது வெங்கடபதி ராயர் காலம். அவரது குரு தாத்தாச்சாரியார்
அரசப்பள்ளியர், கொங்கதேசத்தில் மூன்று மடங்களில் சிஷ்யர்களாக உள்ளனர். நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்.
அவை:
1. மூலகுரு பாலயானந்த சுவாமிகள் - லிங்கதாரி மதம் - அரசவன்னியர்
2. காவேரிபுரம் சுவாமிகள் - வம்சம் முடிந்தது - சாமாதி உள்ளது
3. நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்
2. வன்னியர் - அரச, பந்தமுட்டில் ஒரு பிரிவினர் மற்றும் அரசில் குருநாதசுவாமி கோயில் பிரிவு - கொங்கதேசம், கொள்ளேகாலம் மற்றும் திருச்சி தாரானூர், மதுரை மூனுசாலை சிம்மக்கல் வீதி, பெண்ணாகரம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.