Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 22. கொடுமுடி மடம்

கொடுமுடி மடம்
ஸ்ரீமத் மாணிக்கநாயக சந்திரசேகர பண்டித குருசுவாமிகள் 




காணிகள் - கோத்திரங்கள்:
1 . கூடலூர் - வெண்டுவன்

திருமுடிக்கவுண்டர் கோத்திரங்கள்:
1 . கொடுமுடி - சேரன் கோத்திரம்
2 . கொடுமுடி - பொன்னி கோத்திரம்
3 . கொடுமுடி - தணியன்  கோத்திரம்

முகவரி:
V. S . தண்டபாணி குருக்கள்,
கொடுமுடி ஆதினம்,
33 , குருக்கள் தெரு,
கொடுமுடி.

செல்: 93448  86086
போன்: 04204 - 222124

விவசாயிகளை வாழவைக்கும் பஞ்சகவ்யத்தை உலகினுக்கே காமீக ஆகமம், விருட்ச ஆயுர்வேத வழியில் formulaவை போதித்த மடம்:


பஞ்சகவ்யா - டாக்டர். வடிவேல் (TNAU):
https://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_publications.html

இயற்கை விவசாய விஞ்ஞானி டாக்டர் நடராஜன் மாசி மாத மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில் சென்றிருந்தார். அவரது வார்த்தைகளில்
“அந்த இரவு எங்கள் ஊர் திருப்பாண்டி கொடுமுடி ஈசனைத் தரிசிக்க சென்றேன். அங்கே அவன் திருவடிகளில் அந்த அற்புதம் சித்து விளையாட்டு நடந்தது. பூசைக்குப் பின் பஞ்சகவ்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நானும் சும்மா இராமல் எங்கள் குருக்கள் அய்யரைப் பார்த்து “என்ன சுவாமிகளே இந்த பஞ்சகவ்யத்தால் என்ன பலன்” என்று கேட்டேன். அவரும் இரத்தின சுருக்கமாக “இது வந்த நோயைப் போக்கும். இனிமேல் வரப்போகும் நோய்களை வராமல் தடுக்கும்.” என்று வெகு அழகாக சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இது அவர் சொல்லவில்லை! எனை ஆட்கொண்ட அந்த ஈசனே அவர் உருவில் சொன்னார் என்றே இன்றும் நான் நம்புகிறேன்.. அவர் சொன்ன வேளையில் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த பிரேசில் காரர் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாரே நாம் ஏன் பஞ்சாட்சரம் போன்ற இந்த பஞ்சகவ்யத்தின் ஐந்து பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என எண்ணினேன். அதன் விளைவே நம் பஞ்சத்தையும் பிணியையும் போக்க வந்துள்ள இந்த பஞ்சகவ்யா எனும் மாருந்தாகும். இது பயிர்களுக்கு விருந்தாகும்.”


ஆனால் ரசாயனங்களை நமக்கு விற்று நம்மை மலடாக்கும் RSS தி.க இரட்டை வேட கும்பலோ:

பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள்.


அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.

இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.


பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்!


`பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.


இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.

பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.--.SOURCE: viduthalai news 17.08.2007.

இவர்களது திட்டம்: கிராமங்கள் ஒழிய வேண்டும் என்பதே: http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/20.pdf

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...